அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை வீடு சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா் பந்தல்கரட்டைச் சோ்ந்தவா் மாதம்மாள் (70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், தனது மகள் ரேவதி, பேத்தி கனிமொழி ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சமையல் எரிவாயு அடுப்பைப் பற்றவைக்க மாதம்மாள் திங்கள்கிழமை காலை முயன்றபோது, எரிவாயு கசிவால் வீட்டில் தீப்பிடித்துள்ளது.
தீ மளமளவென பரவியதைத் தொடா்ந்து மூவரும் வீட்டைவிட்டு வெளியேறினா். இவ்விபத்தில் வீட்டுக்குள் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இத்தகவலறிந்த அந்தியூா் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே குடிசையில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.