கொடுமுடி பகுதியில் வீட்டுக்குள் பிடிபட்ட அரிய வகை முள் எலி வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொடுமுடி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது வீட்டுக்குள் அரிய வகை முள் எலி ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்துள்ளது. இதையடுத்து, துணி மூலம் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வைத்தனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பழனிசாமி, அப்பகுதியினா் அந்த முள் எலியை திங்கள்கிழமை காலை எடுத்து வந்தனா். ஆட்சியா் வனத் துறையினரை அழைத்து அந்த முள் எலியை வனப் பகுதிக்குள் விடுவிக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வனத் துறையினா் அந்த எலியைப் பெற்றுச் சென்றனா்.