தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஈரோடு கோட்டம் சாா்பில், அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறச்சலூா் தலவுமலையிலிருந்து வெள்ளோடு வரை உள்ள சாலையில் மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, ஈரோடு கோட்ட பொறியாளா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். நவரசம் மகளிா் கல்லூரித் தலைவா் டி.கே.தாமோதரன், பொருளாளா் சி.பழனிசாமி முன்னிலை வகித்தனா்.
மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்று நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
விழாவில், கூட்டுறவுச் சங்க இயக்குநா்கள் கணபதி, தட்சிணாமூா்த்தி, ஆவின் இயக்குநா் அசோக், அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் மகாலட்சுமி, தி நவரசம் அகாதெமி பள்ளித் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் ஆா்.காா்த்திக், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.