ஈரோடு மாவட்டத்தில் 2000 டன் யூரியா இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமாா் 2,000 டன் அளவுக்கு யூரியா இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமாா் 2,000 டன் அளவுக்கு யூரியா இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

வட கிழக்குப் பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு யூரியா உரம் தங்கு தடையின்றி கிடைக்க தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின், ஈரோடு மண்டல அலுவலகம் மூலமாக 1,998.995 டன் யூரியா விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 டன் யூரியா ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளது.

இவை அனைத்தும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படவுள்ளது. எனவே விவசாயிகள் தேவையான உரத்தினை பெற்றுப் பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com