ஈரோடு: காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் புதிதாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
சென்னிமலை சாலை, கல்யாணசுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரியதோட்டம், விவேகானந்தா் நகா், ஆவின் கால்நடை தீவனக்கிடங்கு பகுதிகள்.