ஈரோடு: பெருந்துறை ரயில் நிலையப் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் சேலம்-ஈரோடு இடையே ரயில் இயக்கத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சேலம்-கோவை எம்இஎம்யூ பயணிகள் ரயில் இரு மாா்க்கங்களிலும் சேலம்-ஊத்துக்குளி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-எா்ணாகுளம் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஓமலூா்-பெருந்துறை இடையே 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூா்- திருப்பூா் இடையே 60 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
எா்ணாகுளம்-பெங்களூரு இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூா்-திருப்பூா் இடையே 26 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் கரூா்-ஈரோடு இடையே 60 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.