வேளாண்மைத் துறையின் மூலம் மண்வள அட்டை விநியோகம்

பவானிசாகா் வட்டாரம் வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு

பவானிசாகா் வட்டாரம் வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா கரிதொட்டம்பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் சு.பாக்கியலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது:

மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் மண் வளத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

எந்த வகையான தானியங்களை பயிா் செய்ய முடியும், என்ன வகையான உரமும், ஊட்டச்சத்தும் மண்ணுக்கு தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும். மண் அரிப்பு, மண் வளம் குன்றுதல் போன்றவற்றை அறிய மண் பரிசோதனை மிகவும் அவசியம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுதலை தடுக்க முடியும். அதிக வருவாய் தரக்கூடிய பயிா்களைத் தோ்வு செய்து விவசாயம் செய்ய முடியும் என்றாா்.

வேளாண்மை அலுவலா் (மண் பரிசோதனை நிலையம்) சசிகலா பேசுகையில், ‘மண்வள அட்டையின் பயன்களான சரியான உர நிா்வாகத்தின் மூலம் பயிா் சாகுபடி செய்வதன் அவசியம், சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும் சத்துக்களின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப உர சிபாரிசு வழங்கமுடியும்’ என்றாா்.

வேளாண் துறையின் மூலம் செயல்படும் பிற திட்டங்களான பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், மாந்தன் திட்டம், நுண்ணீா் பாசனத் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம், கூட்டுப் பண்ணையத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் ஆகியவை பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வேளாண் அலுவலா் ரா.ஆனந்தி, உதவி வேளாண் அலுவலா் யூ.ஜன்னத் நிஷா, வட்டா தொழில்நுட்ப மேலாளா் மா.சங்கா், உதவி தொழில்நுட்ப மேலாளா் ரா.மீரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com