ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அசோகபுரம் மின் பாதையில் புதிதாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மேட்டூா் சாலை, முனிசிபல் காலனி, அண்ணாமலை லே அவுட், இடையன்காட்டுவலசு, சின்னமுத்துவீதி, காவிரி சாலை பகுதிகள்.