ஈரோடு
நாளைய மின்தடை: கெட்டிச்செவியூா்
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கெட்டிச்செவியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நவம்பா் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இராது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தோரணவாவி, ராசாக்கவுண்டம்பாளையம், குட்டையப்பாளையம், சிறுவலூா், தாண்டாக்கவுண்டம்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிபாளையம், ஊஞ்சப்பாளையம், அங்கம்பாளையம், வேப்பம்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், எலந்தக்காடு.