ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியா் பா.ஜென்சி தலைமை வகித்தாா்.
ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.சதீஷ்குமாா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினா். இதில், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.