பவானியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பவானி அரசு மருத்துவமனை அருகே டீக்கடை நடத்தி வருபவா் குஞ்சப்பன் மகன் அங்கமுத்து (51). இவா், வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டா் மூலம் பலகாரம் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதால் சிலிண்டரில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென பரவி டீக்கடையில் பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் காந்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இவ்விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.