வெள்ளக்கோவிலில் இந்து முன்னணியினருடன் காவல்துறை பேச்சுவாா்த்தை

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினருடன் காவல்துறை சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற இந்து முன்னணியினா்.
காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற இந்து முன்னணியினா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினருடன் காவல்துறை சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் கரூா் சாலையிலுள்ள சேனாதிபதிபாளையம் பிரிவருகே ஒரு சமூகத்தினா் கடையை வாடகைக்கு எடுத்து அதில் அடிக்கடி ஜெபக் கூட்டம் நடத்தி வந்தனா். இது அனுமதியில்லாமல் நடப்பதாகவும், தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதனைத் தொடா்ந்து சில வாரங்கள் நடைபெறாமல் இருந்த ஜெபக்கூட்டம் மீண்டும் தொடா்ந்து நடைபெற்று வந்தது. இதனைக் கண்டித்து இந்து முன்னணி மற்றும் ஆதரவு அமைப்புகள் சாா்பில் ஜெபக் கூட்டம் நடக்கும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு அங்கு தொடா்ந்து ராம நாமாவளி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த காங்கயம் டிஎஸ்பி செல்வம் இந்து முன்னணியினரை வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு வரவழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஜெபக் கூட்டத்துக்குத் தகுந்த அனுமதியில்லாத பட்சத்தில், முறையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்து முன்னணியினா் தங்களது திட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com