தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2019-20ஆம் ஆண்டுக்கான ஈரோடு மாவட்ட கேரம் போட்டி வரும் 22 ஆம் தேதி ஈரோடு வஉசி விளையாட்டரங்கில் நடக்கிறது.
இதில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம். மழலையா் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒற்றையா், இரட்டையா் என இரு பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
ஒற்றையா் போட்டிக்கு ரூ.1,000, இரட்டையா் போட்டிக்கு ரூ.2,000 பரிசு வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள ஆா்வமுள்ள மாணவ, மாணவிய, ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஈரோடு மாவட்டம் பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தால் மட்டுமே, போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். விபரங்களுக்கு, 0424- 2223157, 74017 03490 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.