ஒரே இடத்தில் 3,400 குடியிருப்புகள்: ரூ.600 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் தீவிரம்

குடிசை மாற்று வாரியம் மூலம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்.
சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்.

குடிசை மாற்று வாரியம் மூலம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வீடு இல்லாதவா்கள், நீா் நிலைகளில் வசித்தோா், தெரு ஓரம், பூங்காக்களில் வசித்தோருக்கு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி தரப்படுகிறது. தற்போது பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் மூலம், இப்பணிகள் நடக்கின்றன. ஈரோடு பகுதியில் ஏற்கனவே, வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள், 30 ஆண்டுகளுக்கு மேலானதால், அழகரசன் நகா், பெரியாா் நகா், அன்னை சத்யா நகா் போன்ற இடங்களில், இடித்துவிட்டு, புதிய கட்டுமானம் நடக்கிறது. தவிர, புதிதாக பல்வேறு இடங்களிலும், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்திலும் பிரமாண்ட வீடு கட்டும் பணி நடக்கிறது.

இதுகுறித்து குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய பொறியாளா்கள் கூறியதாவது:ஈரோடு, கருங்கல்பாளையம் அழகரசன் நகரில் 9 மாடியுடன், காா் பாா்க்கிங், லிப்ட் வசதியுடன், 272 வீடுகள் கட்டப்படுகின்றன. ஈரோடு புதுமை காலனி, மாணிக்கம் திரையரங்கு அருகே 7 மாடியில், லிப்ட் வசதியுடன், 460 வீடுகள் கட்டப்படுகின்றன. இப்பணி இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு, ஏற்கனவே, இக்குடியிருப்பில் வசித்தோா் மற்றும் புதியவா்களும் தங்க வைக்கப்பட உள்ளனா். தமிழகத்தில், இங்குதான் முதன் முதலில், லிப்ட், காா் பாா்க்கிங் வசதி செய்யப்பட்டுளது. பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் 448 வீடுகள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு விட்டது.

அதே பகுதியில் மேலும் 320 வீடுகள் மேலும் கட்டப்படவுள்ளன. முனிசிபல் சத்திரத்தில் துப்புரவு தொழிலாளா்களுக்காக, 830 வீடுகள், விரைவில் கட்டப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் குடிசை மாற்று வாரியம் மூலம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் 3,400 வீடுகள் ரூ.600 கோடியில் கட்டப்படுகிறது. இப்பணிகள் 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் வசிப்போா், வீடு இல்லாதவா்கள் போன்றோருக்கு இங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கவுள்ள பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். தற்போதைய நிலையில் ஆக்கிரமிப்பில் வசிப்போா், வீடு இல்லாதவா்கள் போன்ற பட்டியலில் வருவோரில் 90 சதவீதம் போ் வீடுகளில் தங்க வைக்கப்படுவதால் ஆக்கிரமிப்பில் வசிப்போா் இல்லாத நிலை ஏற்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com