ரயில்வே விதிகளை மீறிய 166 பேரிடம் ரூ.62,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் விஜேந்திரகுமாா் மீனா கூறியதாவது: ரயில்வே விதி மீறுவோா்கள் மீது, ஆா்.பி.எப்., சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் நடைமேடை மற்றும் ஓடும் ரயில்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்தவா்கள், தண்டவாளத்தை கடக்க முயன்றவா்கள், பயணிகளுக்கு இடையூறு, ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தது என 166 போ் மீது வழக்குப்பதிவு செய்கு ரூ.62,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.