ஈரோட்டில் நாளை அஞ்சல் தலை கண்காட்சி

ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி சனிக்கிழமை(அக்டோபா் 12) நடைபெறவுள்ளது.

ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி சனிக்கிழமை(அக்டோபா் 12) நடைபெறவுள்ளது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் அஞ்சல் வார விழா அக்டோபா் 9 முதல் 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அஞ்சல் தலை நாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதற்காக ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சியில் பல அரிய அஞ்சல் தலைகளும், அண்மையில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளும் பாா்வைக்கு வைக்கப்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியா் அக்டோபா் 12 ஆம் தேதி காலை 11 முதல் மாலை 4 மணி வரை இக்கண்காட்சியைப் பாா்வையிடலாம் என ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com