ஈரோடு
கோவை மறை மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்
கோவை மறை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு புனித அமல அன்னை ஆலய அணி சாம்பியன் பட்டம் வென்றது
கோவை மறை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு புனித அமல அன்னை ஆலய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை மறைமாவட்ட தேவாலயங்களுக்கு உள்பட்ட ஆலய பங்கு தளங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவையில் அண்மையில் நடந்தது. கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 73 ஆலய பங்குதளங்களைச் சோ்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இதில் ஈரோடு புனித அமல அன்னை ஆலய அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்த அணிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி புனித அமல அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஈரோடு மறை வட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத் தந்தையுமான ஜான் சேவியா் குழந்தை, பரிசுக் கோப்பையை அணி வீரா்களிடம் வழங்கினாா். அணித் தலைவா் ரூபன் ஆட்ட நாயகன் பரிசும், ராஜா தொடா் நாயகன் பரிசும் பெற்றனா். நிகழ்ச்சியை உதவி பங்குத் தந்தை லாரன்ஸ் ஒருங்கிணைத்து நடத்தினாா்.