டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிபொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகா் காலனியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஏற்கெனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அங்கு ஒரு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனா். இதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். மேலும், டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனா். இருப்பினும் டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணிகள் முடிந்து கடையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனா். பின்னா், அவா்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கருங்கல்பாளையம் போலீஸாா் இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com