பவானி: பவானியில் சாலையில் பட்டாசு வெடித்ததாக கூறி கூரியா் முகவரைத் தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பவானி தோ்வீதி, கிழக்கு கண்ணாரத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சரவணன் (46). கூரியா் அலுவலக முகவா். இவா், தீபாவளிப் பண்டிகையின்போது வீட்டின் முன்பு சாலையில் பட்டாசு வைத்துள்ளாா். இதனால், அவ்வழியே சென்ற இளைஞா்களுக்கும், சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் சரவணனைத் தாக்கியதோடு, வீட்டிலிருந்த உடமைகளைச் சேதப்படுத்தினா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பவானி பழனிபுரத்தைச் சோ்ந்த ஞானராஜ் மகன் அந்தோணி (29), அதே பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் கண்ணன் (29) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.