பவானி: பா்கூா் மலைப்பகுதியில் கடந்த இரு மாதங்களாகப் பெய்து வரும் கனமழையால் தொடா்ந்து நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் ஏரி வியாழக்கிழமை நிறைந்தது.
பா்கூா், அந்தியூா் வனப் பகுதியில் பெய்த கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை கடந்த வாரம் நிறைந்து உபரிநீா் வெளியேறியது. இதேபோன்று, வனப் பகுதி ஓடைகள் வழியே மழைநீா் தொடா்ந்து பெருக்கெடுத்து வந்ததால் எண்ணமங்கலம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது.
சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தொடா்ந்து அதிகரித்த நீா்வரத்தால் வியாழக்கிழமை அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரிநீா் கிழக்குப் பகுதியில் வெளியேறி பூனாச்சி ஏரிக்கும், மேற்குப் பகுதியில் வெளியேறி கெட்டிசமுத்திரம் ஏரிக்கும் சென்று வருகிறது.
2000 ஆம் ஆண்டு நிறைந்த இந்த ஏரி, தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின்னா் தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.