கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் நீர் வள மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் உழவர் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஜல் சக்தி அபியான் இயக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா நடைபெற்றது.
விழாவில், வேளாண்மை அறிவியல் நிலைய தலைமை விஞ்ஞானிகள், அலுவலர்கள், வேளாண்மைத் துறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், வேளாண்மை பல்கலைக்கழகம் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.