நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்குப் பாராட்டு விழா

நல்லாசிரியர் விருது பெற்ற ஈஞ்சம்பள்ளி  பி.கே.பி. சாமி மெட்ரிக் பள்ளியின் முதல்வருக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

நல்லாசிரியர் விருது பெற்ற ஈஞ்சம்பள்ளி  பி.கே.பி. சாமி மெட்ரிக் பள்ளியின் முதல்வருக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி  முதல்வர் எஸ்.வைஜெயந்தி. இவர் 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்று, சென்னையில் நடைபெற்ற விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நல்லாசிரியர் விருது வழங்கினார்.
விருது பெற்ற முதல்வர் வைஜெயந்திக்கு பி.கே.பி. கல்வி நிறுவனங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி குணசேகரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பெரியசாமி, திலகவதி, அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் பி.கே.பி.அருண் வரவேற்றார்.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வரைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com