பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.சி.கே.சின்னசாமி தலைமை வகித்தார். தாளாளர் எல்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றார்.
விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலம் போட்டு குத்து விளக்கேற்றி வைத்தனர். பள்ளிக் குழந்தைகள் வாமனன் வேடமணிந்து வந்திருந்தனர். மேலும், இசை, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், பள்ளிப் பொருளாளர் சி.ஆர்.மாணிக்கமூர்த்தி, இணைச் செயலாளர்கள் கலாதேவி, கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குமுதா பள்ளியில்...
கோபி, செப். 11: நம்பியூர் குமுதா பள்ளியில் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலை வகுப்பு மாணவ, மாணவிகள் புத்தாடை அணிந்து வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூக் கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர். இதில், பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர்அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.