செப்டம்பர் 18இல் மின் வாரிய ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஈரோட்டில் செப்டம்பர் 18 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. 

மின் வாரிய ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஈரோட்டில் செப்டம்பர் 18 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து மின் வாரிய தலைமைப் பொறியாளர் வரத.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் சார்பில், ஈரோடு மண்டலம் அதன் பகுதிக்கு உள்பட்ட பிற அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களைப் பெற்று தீர்வு காணவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஒவ்வோர் காலாண்டுக்கும் ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு,  மனுக்களைப் பெற்று உரிய நிவாரணம் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மூன்றாம் காலாண்டுக்கான குறைதீர் கூட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் வாரிய ஆய்வு மாளிகை, 948, ஈ.வி.என்.சாலை, ஈரோடு என்ற முகவரியில் நடைபெற உள்ளது. மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணலாம். தனி நபர் மனுக்கள் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் முற்பகலில் மனுவாகப் பெறப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com