இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: இளைஞர் பலி

தனியார் நிறுவனப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்  இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.  

தனியார் நிறுவனப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்  இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.  
ஈரோடு ஈ.பி.பி. நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர் (19). தந்தையின் பிரிண்டிங் பட்டறையை கவனித்து வந்தார். இவரது நண்பரான ஈரோடு, நாராயணவலசு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் தனுஷ் (19). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் படித்து வருகிறார். 
இந்நிலையில், கிஷோரும், தனுஷும் இருசக்கர வாகனத்தில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி சனிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தனர். அதே சாலையில் இவர்களுக்கு முன்னால் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தின் பேருந்து சென்று கொண்டிருந்தது. புதுப்பாளையம் பிரிவு அருகே அந்த பேருந்து வலது புறம் திரும்பியது. 
அப்போது எதிர்பாராமல் பின்னால் வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த தனுஷ் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஈரோடு தாலுகா காவல் நிலைய போலீஸார் கிஷோரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com