செப்டம்பர் 18 இல் மின் உபயோகிப்பாளர் குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோக கழகம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதி (புதன்கிழமை) காலை

தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோக கழகம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் சத்தி - அத்தாணி சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி,  விநியோகக் கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  
மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோபி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப்   பொறியாளர் நேரிலேயே குறைகளைக் கேட்டு நடவடிக்கை  எடுக்க உள்ளதால்  சத்தியமங்கலம் கோட்ட பகுதிக்கு உள்பட்ட  மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com