திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.இ.பிரகாஷ் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் பலர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.  முகாமில், திமுகவின் செயல்பாடுகள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை கட்சி நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.
இதில், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மொடக்குறிச்சியில்...
மொடக்குறிச்சி ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி மொடக்குறிச்சி பேரூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, ஈரோடு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சு.குணசேகரன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில்பொய்யாமொழி மகேஷ், உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கி வைத்துப் பேசினார். 
தொடர்ந்து, அதிமுக பேரூர் கழக அவைத் தலைவர் சின்னுசாமி, பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.   இதில், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், பேரூர் கழகச் செயலாளர்கள் சரவணன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com