விடுதி உரிமையாளருக்கு மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு

விடுதி பெண் உரிமையாளரை மிரட்டியதாக ஒருவர் மீது கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விடுதி பெண் உரிமையாளரை மிரட்டியதாக ஒருவர் மீது கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி நிர்மலா (45). இவர், கடந்த 12 ஆண்டுகளாக கோபி - ஈரோடு பிரதான சாலையில் விடுதி நடத்தி வருகிறார். 
சிறுவலூர் எலந்தகாடு வக்கனாத் தோட்டத்தில் வசித்து வரும் வாசு என்பவர் செப்டம்பர் 10 ஆம் தேதி நிர்மலாவின் செல்லிடப்பேசிக்குத் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கோபி போலீஸாரிடம் நிர்மலா புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கும், தனது விடுதிக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து, இரு பிரிவுகளில் வாசு மீது கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com