சிவகிரி பொன்காளியம்மன் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமனம்

சிவகிரி அருகே தலையநல்லூர் பொன்காளி அம்மன் கோயிலுக்கு முதன்முதலாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சிவகிரி அருகே தலையநல்லூர் பொன்காளி அம்மன் கோயிலுக்கு முதன்முதலாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ஈரோடு தொகுதி. அ.தி.மு.க. முன்னாள்  மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் கிராமக் குழுத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பரமு (எ) ஆறுமுகம்,  தங்கவேல், நல்லசாமி ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் அறங்காவலர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில், கோயில் செயல் அலுவலர் முத்துசாமி, வேலாயுதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பெரியசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட இசை வேளாளர்கள் சங்கத்தின் சார்பில், புதிய அறங்காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com