டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்: ரூ. 50 லட்சம் பரிசு அறிவிப்பு

டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஆடைகள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசுகள் வழங்கும் திட்டத்துடன் கூடிய தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.

டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஆடைகள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசுகள் வழங்கும் திட்டத்துடன் கூடிய தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.
ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை 1,400 கடைகளுடன் செயல்படுகிறது.  தீபாவளி, ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சிறப்பு விற்பனை அண்மையில் தொடங்கியது. டெக்ஸ்வேலி இயக்குநர் டி.பி.குமார் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு இங்குள்ள அனைத்து ஜவுளி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் டெக்ஸ்வேலிக்கு வருபவர்களுக்கு ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக டெக்ஸ்வேலி நிர்வாகம் சார்பில் பரிசுக் கூப்பன் திட்டத்தை அறிவித்து இருக்கிறோம். அதன்படி இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். அதில் அவர்களின் விவரம், ஒரு ஸ்லோகம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டிருக்கும். 
இந்தப் போட்டி அதிர்ஷ்ட போட்டியாகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு கார் வழங்கப்படும். இதுபோல் இருசக்கர வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் என்று எண்ணற்ற பரிசுகள் உள்ளன. இது 2019 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை என்பதால் 2019 பரிசுப் பொருள்கள் ரூ. 50 லட்சம் செலவில் வழங்குகிறோம். பரிசுக் கூப்பன் ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த 100 ரூபாயை வாடிக்கையாளர்கள் ஜவுளி வாங்கும் கடையில் விலையில் கழித்துக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com