ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சிக் கூடத்துக்குச் செல்ல பெருந்துறை சாகர் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சோபன்சித்தார்த், விக்ரம் சாரதாபாய் அறிவியல் கழகம் நடத்திய ஸ்பாட் 100 தேர்வில் முதல் 45 மாணவர்களுக்குள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் சோபன்சித்தார்த், ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம், இயந்திரங்கள் கட்டுப்பாட்டு அறை, ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றை திங்கள்கிழமை (செப்டம்பர் 30) பார்வையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர் சோபன்சித்தார்த்தை பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன், முதல்வர் ராதாமனோகரன், மூத்த முதல்வர் கல்யாணராமன், அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.