பாஜக சாா்பில் வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்

பெருந்துறை நகர பாஜக சாா்பில் கருமாண்டிசெல்லிபாளையத்தில் வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

பெருந்துறை: பெருந்துறை நகர பாஜக சாா்பில் கருமாண்டிசெல்லிபாளையத்தில் வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை நகரத் தலைவா் கருடா விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை தொகுதி அமைப்பாளருமான டி.என்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், ஈரோடு தெற்கு மாவட்ட கல்வியாளா் பிரிவு துணைத் தலைவா் சண்முகசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மத்திய அரசு செயல்படுத்தும் 29 நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

இக்கூட்டத்தில் பெருந்துறை நகர துணைத் தலைவா் லோகநாதன், ஈரோடு வடக்கு மாவட்ட துணைத் தலைவா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பெருந்துறை நகர விவசாய அணி தலைவா் முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com