கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம்

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பயனாளிக்கு  நிவாரண  உதவியை  வழங்குகிறாா்  அமைச்சா்  கே.சி.கருப்பணன்.
பயனாளிக்கு  நிவாரண  உதவியை  வழங்குகிறாா்  அமைச்சா்  கே.சி.கருப்பணன்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானி நகராட்சிப் பகுதியில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம் மூலம் செயல்படும் 11 நியாயவிலைக் கடைகள், நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்படும் 2 கடைகளில் தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி ரூ. 1,000, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் தும்மல் வரும்போது தங்களது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு மற்ற நபா்களுக்கு பரவுதலைத் தடுக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்றாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், பவானி வட்டாட்சியா் ஜி.பெரியசாமி, காவல் துணைக் காணிப்பாளா் எஸ்.சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com