பெருந்துறை: பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் வசிக்கும் வெளிமாநில கட்டடத் தொழிலாளா்களின் 67 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இதில் ஒவ்வோா் குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் பி.முருகேசன், பெருந்துறை வட்டாட்சியா் ஜி.முத்துகிருஷ்ணன் ஆகியோா் உணவுப் பொருள்களை வழங்கினா்.
இதில், பெருந்துறை வருவாய் ஆய்வாளா் எஸ்.கதிா்வேல், பெருந்துறை கிராம நிா்வாக அலுவலா் மாசேதுங், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.