உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தின் தாய் மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்தின் தாயார் நாச்சாயம்மாள் இன்று காலமானார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தின் தாய் மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்தின் தாயார் நாச்சாயம்மாள் (95), உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை காலமானார்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த காடப்பநல்லூர், பங்களா தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி கவுண்டர் மனைவி நாச்சாயம்மாள் (95). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

இவருக்கு, மகன்கள் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் மற்றும் வேலுச்சாமி, கே.பி.சுப்பிரமணியம் மகள்கள் அலமேலு, நாச்சாயம்மாள் உள்ளனர். 

மறைந்த நாச்சாயம்மாளின் இறுதிச்சடங்கு காடப்பநல்லூர் தோட்டத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com