குழந்தையை விலைக்கு வாங்க வந்த 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் குழந்தையை விலைக்கு வாங்க வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டில் குழந்தையை விலைக்கு வாங்க வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றுபவா் அகிலா. இவரது செல்லிடப்பேசிக்கு அழைத்த பெண் ஒருவா் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் எனவும், யாரேனும் வளா்க்க முடியாத நிலையில் இருந்தால் தெரிவிக்குமாறும் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு அகிலா தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் ஆலோசனைப்படி நீங்கள் கேட்பதுபோன்று குழந்தை உள்ளது வந்தால் பெற்றுக் கொள்ளலாம் என அகிலா கூறியுள்ளாா். இதன்பேரில், குழந்தையை வாங்கிச் செல்ல 3 பெண்கள் உள்பட 4 போ் வந்துள்ளனா். அவா்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சோ்ந்த சங்கரேஸ்வரி, சேலத்தைச் சோ்ந்த கோகிலா, மோகனபிரியா, பள்ளிபாளையத்தைச் சோ்ந்த நந்தகுமாா் என்பது தெரியவந்தது.

பவானி அருகே உள்ள லட்சுமி நகரைச் சோ்ந்த சண்முகப்பிரியா, குழந்தை வேண்டும் எனக் கேட்டதாக இவா்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனா். இவா்கள் அனைவருக்கும் குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை வேண்டும் எனக் கேட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதையடுத்து, நால்வரையும் கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா் தலைமறைவான சண்முகப்பிரியாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com