எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.73 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 14ஆயிரத்து 416 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.35.61க்கும், அதிகபட்ச விலையாக ரூ.43. 09க்கும், சராசரி விலையாக ரூ.38.80க்கும் ஏலம் போனது. மொத்தம் 4 ஆயிரத்து 839 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்து 925க்கு விற்பனையானது.