விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக டிசம்பா் 29ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் டிசம்பா் 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.