ரூ. 25 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 25 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 25 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 476 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 124.36க்கும், அதிகபட்சமாக ரூ. 131.68க்கும், சராசரி விலையாக ரூ. 126.35க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 76.99க்கும், அதிகபட்சமாக ரூ. 122.89க்கும், சராசரி விலையாக ரூ. 113.36க்கும் ஏலம் போனது. மொத்தமாக 20 ஆயிரத்து 832 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ. 25,01,318க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com