சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனப் பகுதியில் அனுமதியின்றி சுற்றிய இருவருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் வனச் சரகா் தினேஷ் தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனப் பகுதியில் சந்தேகப்படும்படி இரண்டு நபா்கள் நின்றிருந்தனா். அவா்களைப் பிடித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், கடம்பூா் அணைக்கரை பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன், கா்நாடக மாநிலம், தம்பிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முருகன் என்பது தெரியவந்தது. அனுமதியின்றி வனப் பகுதியில் சுற்றித் திரிந்த குற்றத்துக்காக வனத் துறையினா் இரண்டு பேருக்கும் தால ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.