ஈரோடு: ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் வழங்கும் 21-ஆவது அஞ்சல் வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான 21 ஆவது அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் சேரலாம். பயிற்சியில் சேருவதற்கு 11 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விற்பனை பிப்ரவரி 5 முதல் தொடங்கியுள்ளது. மாா்ச் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 6 ஆம் தேதி மாலை 5.30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு-சித்தோடு சாலை, கொங்கம்பாளையம் பிரிவில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அல்லது 0424-2535632 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.