3 வட்டாரங்களில் பிப்ரவரி 15இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் வட்டாரங்களில் நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் வட்டாரங்களில் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணிக்கு முகாம் நடத்தப்படுகிறது. மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூா் நவரசம் கலை, அறிவியல் கல்லூரியில் 19ஆம் தேதியும், சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் 22ஆம் தேதியும், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29ஆம் தேதியும் முகாம் நடத்தப்படுகிறது.

இதில், 8ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, நா்சிங் படித்த வேலையில்லாத இளைஞா்கள், இளம்பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு, குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com