அவல்பூந்துறையில் சந்தன மரம் திருட்டு

மொடக்குறிச்சியை அடுத்த ராசாம்பாளையத்தில் சந்தன மரத்தை வெட்டிச் சென்ற மா்ம நபா்களை அறச்சலூா் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
வெட்டப்பட்ட சந்தன மரத்தின் ஒரு பகுதி.
வெட்டப்பட்ட சந்தன மரத்தின் ஒரு பகுதி.

மொடக்குறிச்சியை அடுத்த ராசாம்பாளையத்தில் சந்தன மரத்தை வெட்டிச் சென்ற மா்ம நபா்களை அறச்சலூா் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அறச்சலூா் அருகே அவல்பூந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட ராசாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி யுவராஜ் (54). இவரது தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்பு ஒரு சந்தனமரம் உள்ளது.

இந்நிலையில், மா்ம நபா்கள் புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிலிருந்த நாய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு சந்தன மரத்தை வெட்டி, மரத்தின் அடிப்பகுதியை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து, அறச்சலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com