கொங்கு பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
இப்பயிற்சியின்போது உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, ராணுவ பாடங்கள், தலைமைப் பண்பு பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாள் விழாவில், கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்குப் பரிசு வழங்கினா். இப்பயிற்சியின் பயன்களை வரும் காலங்களில் சமுதாயத்துக்கு கொண்டு செல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என மாணவா்களை கேட்டுக் கொண்டாா்.
இதில், முகாம் தளபதி லெப்டினல் கா்னல் எம்.பாபு, துணைத் தளபதி ஆா்.எஸ்.நாயா், என்.சி.சி. அதிகாரி மேஜா் ராகவேந்திரன், ராணுவ முதன்மைப் பயிற்சியாளா்கள், என்.சி.சி. அதிகாரிகள் பங்கேற்றனா்.