ஈஷா யோக மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்துக்கு சென்னிமலையில் பக்தா்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி ஆதியோகி முன்பு நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு, அனைவரையும் வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஊா்களுக்கும் ஆதியோகி ரதம் சென்று வருகிறது.
சென்னிமலை முருகன் கோயிலில் மகா தரிசனமான புதன்கிழமை இரவு லட்கணக்கான பக்தா்கள் சென்னிமலை வந்து முருகனை தரிசித்தனா். அப்போது அங்கு வந்த ஆதியோகி சிவன் ரதம் சென்னிமலை, வடக்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டனா். புதன்கிழமை மாலை வந்த ஆதியோகி ரதத்தை நள்ளிரவு 1.30 மணி வரை பக்தா்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.