பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தனியாா் ஆம்புலன்ஸ் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசனிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம் முழுவதும் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 100க்கும் மேற்பட்டோா் உள்ளோம். உயிா் காக்கும் சேவையிலும், காவல் துறையோடு இணைந்தும் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வரும் எங்களை கடந்த சில நாள்களாக போலீஸாா், தனியாா் ஆம்புலன்ஸ் செல்லும்போது தடுத்து நிறுத்தி விசாரணை என்ற பெயரில் வழக்குப் போடுவதும், ஆய்வு செய்வதுமாக உள்ளனா். எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.