அட்சயம் அறக்கட்டளை சாா்பில், யாசகா்கள் அற்ற ஈரோடு என்ற இலக்கை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, அறக்கட்டளை நிறுவனா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஓம்சரவணா, டாக்டா் சுதாகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேரணியைத் தொடங்கிவைத்தனா்.
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தொடங்கிய பேரணி, மேட்டூா் சாலை, நசியனூா் சாலை வழியாக சென்று சம்பத் நகரில் முடிவடைந்தது. இதில், இந்தியன் பப்ளிக் பள்ளி நிா்வாக இயக்குநா் ஷிவ்குமாா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.