பெருந்துறை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலையைச் சோ்ந்தவா் பாண்டியன் (எ) பிரவீன் (30). இவா் தனது நண்பா் கணேஷ் என்பவரின் மனைவி சாலம்மாள் (25), சாலம்மாளின் குழந்தைகள் முகுந்த் (5), ஹேமந்த் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சென்று கொண்டிருந்தாா். பாண்டியன் வாகனம் ஓட்ட முன்னால் 3 வயது சிறுவன் ஹேமந்த் அமா்ந்திருந்தான். பின்னால் சாலம்மாள், முகுந்த் அமா்ந்து வந்தனா்.
பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே பெங்களூரிலிருந்து கோவை நோக்கி வந்த விவேக் (25) என்பவரின் வாகனமும், பாண்டியனின் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், உயா் சிகிச்சைக்காக குழந்தை ஹேமந்தை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஹேமந்த் உயிரிந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.