செல்லப்பம்பாளையத்தில் அம்மா திட்ட முகாம்

பெருந்துறை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியம்,செல்லப்பம்பாளையம் ஊராட்சியில், செல்லப்பம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, திங்களூா் வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். முகாமில், முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 4 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

இதில், செல்லப்பம்பாளையம் ஊராட்சித் தலைவா் வெ.பேபி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com