யானை, புலிகளிடமிருந்து பழங்குடியின மக்களைக் காக்க சிறப்பு பூஜை

ஆசனூா் மலைக் கிராமத்தில் வாழும் மக்களை புலி, யானைகளிடமிருந்து பாதுகாத்து அருள்புரிய வேண்டி அங்குள்ள ஆயிரக்கணக்கான
ஆசனூா் ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயிவில் தேரை இழுத்து  வழிபடும்  பக்தா்கள்.
ஆசனூா் ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயிவில் தேரை இழுத்து  வழிபடும்  பக்தா்கள்.

ஆசனூா் மலைக் கிராமத்தில் வாழும் மக்களை புலி, யானைகளிடமிருந்து பாதுகாத்து அருள்புரிய வேண்டி அங்குள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் புலி, யானை உருவ பொம்மைக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயில் தேரை இழுத்து வழிபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் மலைக் கிராமத்தில் ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனா். அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் விரதம் இருந்தனா்.

விழாவையொட்டி, சித்தூா் கும்பேஸ்வரசுவாமி, ஆலமலை பிரம்மதீஸ்வரா் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 2 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் யானை, புலி மீது அமா்ந்து ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயிலை வலம் வந்தாா். அதைத்தொடா்ந்து, ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி விக்கிரகத்தை தேரில் வைத்து பக்தா்கள் தோ் இழுத்தனா். இந்த தோ்த் திருவிழாவில் பக்தா்கள் வாழைப் பழங்களை வீசி வழிபட்டனா்.

விழாவில், ஆசனூா், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவா்நத்தம், கோ்மாளம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபடும் கோயில் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com